விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் |
மலையாளத் திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டவர் டொவினோ தாமஸ். வருடத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து படங்களாவது கொடுத்து விடும் இவர் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கதைக்களமாகவும், புதிய கதாபாத்திரமாகவும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார் டொவினோ தாமஸ். அந்தபடம் மிகப்பெரிய வெற்றி பெறாவிட்டாலும் கூட அதில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வில்லனாக நடித்திருந்த டொவினோ தாமஸ் ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டார்.
அதற்கடுத்து அவர் மலையாளத்தில் நடித்த மின்னல் முரளி உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நன்கு வரவேற்பை பெற்றுள்ளார். இந்தநிலையில் மாரி-2 படத்துக்கு பிறகு ஏன் தமிழில் நடிக்கவில்லை என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய டொவினோ தாமஸ், “அந்த சமயத்தில் மலையாளத்தில் கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் ஒப்பந்தமாகி இருந்தேன். இங்கே தமிழில் ஒரு படம் நடிப்பதற்குள் அங்கே மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து விடலாம். அந்த படங்களை ஒதுக்கி வைத்து விட்டு தமிழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது வரை அதுதான் தொடர்கிறது. நேரமும் நல்ல கதை அமையும்போது நிச்சயம் தமிழில் நடிப்பேன்” என்று கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.