ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாளத் திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டவர் டொவினோ தாமஸ். வருடத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து படங்களாவது கொடுத்து விடும் இவர் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கதைக்களமாகவும், புதிய கதாபாத்திரமாகவும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார் டொவினோ தாமஸ். அந்தபடம் மிகப்பெரிய வெற்றி பெறாவிட்டாலும் கூட அதில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வில்லனாக நடித்திருந்த டொவினோ தாமஸ் ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டார்.
அதற்கடுத்து அவர் மலையாளத்தில் நடித்த மின்னல் முரளி உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நன்கு வரவேற்பை பெற்றுள்ளார். இந்தநிலையில் மாரி-2 படத்துக்கு பிறகு ஏன் தமிழில் நடிக்கவில்லை என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய டொவினோ தாமஸ், “அந்த சமயத்தில் மலையாளத்தில் கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் ஒப்பந்தமாகி இருந்தேன். இங்கே தமிழில் ஒரு படம் நடிப்பதற்குள் அங்கே மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து விடலாம். அந்த படங்களை ஒதுக்கி வைத்து விட்டு தமிழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது வரை அதுதான் தொடர்கிறது. நேரமும் நல்ல கதை அமையும்போது நிச்சயம் தமிழில் நடிப்பேன்” என்று கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.




