பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
ஜீவி, ஜீவி 2, மெர்லின் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அஸ்வினி சந்திரசேகர். தனக்கான ஒரு இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடுகிறார். இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் படம் 'கங்கணம்'. இதில் கூத்துப்பட்டறை சவுந்தர் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரணா, சிரஞ்சன், சரவணன், சம்பத்ராம், அட்ரஸ் கார்த்திக், 'விஜய் டிவி' ராமர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்குச் செல்வா இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் இசையரசன் கூறும்போது “ஊரையே மிரட்டிக் கொண்டிருக்கிற வில்லன், நாயகன் குடும்பத்தில் கொடூரமான சம்பவம் ஒன்றை செய்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியையும் அவமானப்படுத்தி விடுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொல்லை கொடுக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் குழுவாக இணைந்து பழிவாங்கக் கங்கணம் கட்டுகிறார்கள். அதைச் செய்தார்களா? இல்லையா? என்பது கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.