மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பல ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள் மறு வெளியீடு செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால் சமீபத்திய படங்கள்கூட ரீ ரிலீசுக்கு வருவது டிரண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி சிறந்த ஒரிஜினில் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் மே 10-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் மறுமுறை வெளியிடப்பட உள்ளது. ராஜமவுலியின் பாகுபலி அளவிற்கு வரவேற்பை பெறாத இந்த படம் ஆஸ்கர் விருதை பெற்ற பிறகு மக்களிடம் பார்க்கும் ஆர்வம் வந்திருப்பதால் இதனை தயாரிப்பு தரப்பு வெளியிடுவதாக கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ‛நாட்டு நாட்டு' பாடலின் தொழில்நுட்ப தரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.