30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதில் இருந்து மீண்டு வந்துள்ள அவர் மீண்டும் படங்களில் நடிக்கிறார். இருப்பினும் நோய் தாக்கத்தால் அவ்வப்போது சிகிச்சை எடுத்து கொள்கிறார். இன்ஸ்டா தளத்தில் நோயிலிருந்து மீள்வதற்காக என உடலில் டவலை கட்டிக் கொண்டு சிகிச்சை எடுக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார் சமந்தா.
இதன் உடன் பெண் ஒருவர் உடலில் ஆடையின்றி உடல் அங்கங்களை கைகளால் மறைத்தபடி இருக்கும் ஒரு போட்டோவும் வெளியாகி இது சமந்தா என சிலர் பரப்பி வந்தனர். மேலும் அந்த போட்டோவை சமந்தா நீக்கவிட்டதாகவும் வலைதளத்தில் வைரலாக்கினர். இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்றும், இது சமந்தா தான் வலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் இதற்கு பதில் தரும் விதமாக ‛‛உண்மையான பலம் என்பது உங்களை நியாயப்படுத்தவோ, நிரூபிக்கவோ அல்ல...'' என்ற வாசகத்தை குறிப்பிட்டார் சமந்தா. அதாவது அந்த போட்டோ மார்பிங் என குறிப்பிடவே சமந்தா இப்படி பகிர்ந்ததாக தெரிகிறது.