300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மறைந்த நடிகர் குமரிமுத்து முன்பு அளித்த ஒரு பேட்டியை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‛சில கற்றார் பேச்சும் இனிமையே...' என பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த பேட்டியில், நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார் குமரிமுத்து.
அதில், இந்தப் பாடலில் யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் படித்தவர்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை. சில நூல்களை மட்டுமே கற்றவர் பேச்சிலும் பல கற்றோம் என பெருமை கொள்ளும் மனிதர்கள் பெரிய படிப்பு படித்தோருக்கு அச்சாணியாக கொஞ்சம் படித்தவர்கள் இருப்பார்கள். குறிப்பாக, பெரிய சூரியனின் ஒளியில் இருந்து ஒரு சிறு குடை காப்பது போல் என்று அந்த பாடலின் விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக இப்போது இந்த பதிவை போட்டு உள்ளார். இதன் மூலம் யாருக்காவது அவர் பதில் கொடுத்து இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் சில இளையராஜா, வைரமுத்து ஆகியோரை குறிப்பிட்டுள்ளதாக கருத்து பதிவிட்டுள்ளனர்.