லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகை கவுதமி. சமூக ஆர்வலரும் கூட. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஸ்வாத்தான் கிராமத்தில் நிலம் வாங்குவதற்காக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் நடிகை கவுதமி மூன்று கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அழகப்பனோ பிளசிங் அக்ரோ பார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்வாத்தான் கிராமத்தில் உள்ள நிலத்தை 57 லட்ச ரூபாய்க்கு பவர் எழுதி வாங்கியுள்ளார்.
அந்த நிறுவனத்தின் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது என்பதால் தன்னிடம் நிலம் வாங்கித் தருவதாக அழகப்பன் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் என ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் கவுதமி புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணைக்கு ஆஜராகி விபரங்களை தெரிவித்துள்ளார்.