மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகத்திரைப்படங்கள் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம். ஆனால், ஒரு படத்தின் நான்காம் பாகம் என்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். அப்படி ஒரு அபூர்வமாக 'அரண்மனை 4' நாளை வெளியாக உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். முந்தைய மூன்று பாகங்களைப் போலவே இந்தப் படத்திற்கும் வரவேற்பு கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.
'அரண்மனை' படத்தின் முதல் பாகம் 2014ல், இரண்டாம் பாகம் 2016ல், மூன்றாகம் பாகம் 2021ம் ஆண்டில் வெளியானது.
இதற்கு முன்பு 'காஞ்சனா' படம் மூன்று பாகங்களாகவும், 'சிங்கம்' படம் மூன்று பாகங்களாகவும் வெளிவந்தது. 'காஞ்சனா' பட பாகங்களை முனி சீரிஸ் எனவும் அழைத்து 'காஞ்சனா 3' படத்தை முனி 4 என்றும் குறிப்பிட்டார்கள்.