புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகத்திரைப்படங்கள் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம். ஆனால், ஒரு படத்தின் நான்காம் பாகம் என்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். அப்படி ஒரு அபூர்வமாக 'அரண்மனை 4' நாளை வெளியாக உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். முந்தைய மூன்று பாகங்களைப் போலவே இந்தப் படத்திற்கும் வரவேற்பு கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.
'அரண்மனை' படத்தின் முதல் பாகம் 2014ல், இரண்டாம் பாகம் 2016ல், மூன்றாகம் பாகம் 2021ம் ஆண்டில் வெளியானது.
இதற்கு முன்பு 'காஞ்சனா' படம் மூன்று பாகங்களாகவும், 'சிங்கம்' படம் மூன்று பாகங்களாகவும் வெளிவந்தது. 'காஞ்சனா' பட பாகங்களை முனி சீரிஸ் எனவும் அழைத்து 'காஞ்சனா 3' படத்தை முனி 4 என்றும் குறிப்பிட்டார்கள்.