'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளிவந்து பெரும் வசூலைக் குவித்த படம் 'பாகுபலி'. அதன் அனிமேஷன் தொடர் ஏற்கெனவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அதன் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது.
இந்நிலையில் இது பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ளார். 'மகிழ்மதி மக்கள் அவருடைய பெயரை உச்சரிக்கும் போது பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் அவர் திரும்பி வருவதைத் தடுக்க முடியாது. 'பாகுபலி - கிரௌன் ஆப் பிளட்', அனிமேஷன் சீரிஸ், விரைவில்,” என சிறிய வீடியோ ஒன்றுடன் பதிவிட்டுள்ளார்.
'பாகுபலி' படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகு அனிமேஷன் தொடர் வெளிவர உள்ளது. படத்தைப் போலவே அதுவும் வரவேற்பைப் பெறுமா என்பது வெளிவந்த பிறகுதான் தெரியும்.