காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மிகப்பெரிய இடத்துக்கு வருவார் என்று கணிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர் நித்தி அகர்வால். அறிமுகமே 'முன்னா மைக்கேல்' என்ற பாலிவுட் படத்தில்தான். அதன்பிறகு தெலுங்கிற்கு வந்த அவர் அங்கு மளமளவென நடித்தார். 'ஈஸ்வரன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தர், 'பூமி' படத்தில் நடித்தார், கடைசியாக 'கலக தலைவன்' படத்தில் நடித்தார். இதற்கு இடையில் ஒரு இளம் தமிழ் நடிகருடன் லிவிங் டு கெதராக வாழ்கிறார். தெலுங்கு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து விட்டார் என பல தகவல்கள் வெளிவர அவரது மார்க்கெட் சரிந்தது.
தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறார். தற்போது இரண்டு பெரிய படங்களில் இரண்டு பெரிய ஹீரோக்களின் ஜோடியாக நடித்து வருகிறார். பவன் கல்யாண் ஜோடியாக 'ஹரி ஹர வீரமல்லு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார், கிரிஷ் ஜெகன்னாத் இயக்குகிறார். கீரவாணி இசை அமைக்கிறார். மெகா சூர்யா புரொடக்ஷன் தயாரிக்கிறது.
அடுத்து நித்தி அகர்வால் பிரபாஸ் ஜோடியாக 'தி ராஜா சாப்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மாருதி இயக்குகிறார், தமன் இசை அமைக்கிறார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கிறது. மாளவிகா மோகனன், ரித்தி குமார், யோகி பாபு, வரலட்சுமி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படங்களின் மூலம் விட்ட இடத்தை பிடித்து விடலாம் எனறு நித்தி உறுதியாக நம்புகிறார்.