300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
'ஊமை விழிகள்' படத்தில் இடம்பெற்ற பாடல் வரியை தலைப்பாக கொண்டு உருவாகும் படம் 'நிறம் மாறும் உலகில்'. இந்த படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன், ஜிஎஸ் சினிமா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க பிரிட்டோ இயக்குகிறார். தேவ் பிரகாஷ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரிட்டோ கூறும்போது, “நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள், அதை இணைக்கும் ஒரு புள்ளிதான் படம். நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி என ஒவ்வொருவரும் இதுவரையிலும் அவர்களை பார்த்திராத வகையிலான வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
நான்கு கதைகளும் வேறு வேறு களங்களில் நடக்கிறது. மும்பை செட் இங்கு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு அதில் ஒரு கதை, வேளாங்கண்ணி பின்னணியில் ஒரு கதை, சென்னை ஹவுசிங் போர்ட் பின்னணியில் ஒரு கதை, திருத்தணி அருகில் ஒரு கிராமத்தில் ஒரு கதை என பல்வேறு இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதாக அழகான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. என்றார்.