டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த குறும்படமான "காலம் மாறுமா" (சென்னை வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட கதை)-க்கு 2024 ம் ஆண்டிற்கான அமீரக தமிழ் குறும்பட விழாவில் சிறந்த படத்துக்கான சிறப்பு விருது பெற்றது.
துபாய், ஈரானியன் கிளப்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நடுவராகப் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி பங்கேற்றார். சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை உண்டாக்கியதற்காக இக்குறும்படத்தை உருவாக்கிய துபாயில் வசிக்கும் தமிழக மாணவர்களாகிய அனன்யா மணிகண்டன் மற்றும் ஷியாம் மணிகண்டனை பாராட்டினார்.
மேலும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன், ‛‛இது ஐக்கிய நாடுகள் சபையின் (UN STG) நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் குறிக்கோளின் 13வது இலக்கு ஆகும். அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு சென்றடைய வேண்டும்'' என கூறி இந்த குறும்படத்தையும், மாணவர்களது முயற்சியையும் பாராட்டினார்.




