‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
குட்டிப் புலி, கொம்பன், மருது போன்ற கிராமத்து ஆக்ஷன் படங்களைக் ரசிகர்களுக்கு தந்தவர் இயக்குனர் முத்தையா. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' என படம் பெரிதளவில் தோல்வி அடைந்தது. இதனால் இவருக்கு அடுத்து எந்த முன்னனி நடிகர்களின் கால்ஷீட்டும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தனது இயக்கத்தில் தன் மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக அறிமுகபடுத்தி புதிய படம் ஒன்றைக் இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. இப்போது இந்த படத்திற்கு 'சுள்ளான் சேது' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டர் உடன் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.