பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஹிந்தியில் சைத்தான் படத்தை அடுத்து இரண்டு புதிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஜோதிகா. தமிழில் 2021ம் ஆண்டு ரா.சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சசிகுமாருடன் இணைந்து ஜோதிகா நடித்திருந்த ‛உடன்பிறப்பே' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அண்ணன்- தங்கை செண்டிமென்ட் கதையில் உருவான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான கதை பணியில் ஈடுபட்டிருந்தார் சரவணன். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஜோதிகாவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஹிந்தியிலும் ஜோதிகாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளதால், இப்படத்தை பான் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.