என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர், மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களாகவே படம் இயக்கும் எண்ணம் அவரது மனதில் இருந்தது. அதற்கு உயிர் கொடுக்கும் விதமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு 'பரோஸ்' என்கிற வரலாற்று படத்தை இயக்கத் துவங்கினார் மோகன்லால். இதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் மோகன்லால். அவருக்கு இயக்குனர் சங்க உறுப்பினர் அட்டை தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர் எந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் அதை பகிர்ந்து கொள்வாரோ அதே மகிழ்ச்சியுடன் தனது உறுப்பினர் அட்டையை சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் மோகன்லால்.