ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த பிரபல பிசினஸ்மேன் டாக்டர் எ.வேலுமணி. தைராய்டு பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர். சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட கால நண்பர் சிவகுமாரை சந்தித்தது பற்றிய பதிவுகளைப் போட்டிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியது குறித்த பதிவொன்றை இன்று பதிவிட்டுள்ளார். அந்த சந்திப்பில் நடிகர் சிவகுமாரும் உடனிருந்துள்ளார். “கனவு நனவானது… 50 வருடக் காத்திருப்பு. என்னைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தது மகிழ்ச்சி. எனது கதை, எனது பயணம், 40 முழு நிமிடங்கள் கொடுத்தார். சூப்பர்ஸ்டார் எனது 'பன்ச்லைன்'களைப் பேசியதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. குளிர்ச்சியான சிரிப்பு, தூய்மையான கவனம். அவரை சந்தித்த போது, 'தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்,' என்றார். வாவ்..என்ன ஒரு பயணம், என்ன ஒரு மனிதத் தன்மை, அவர் ஒருவர் மட்டுமே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.