மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த பிரபல பிசினஸ்மேன் டாக்டர் எ.வேலுமணி. தைராய்டு பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர். சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட கால நண்பர் சிவகுமாரை சந்தித்தது பற்றிய பதிவுகளைப் போட்டிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியது குறித்த பதிவொன்றை இன்று பதிவிட்டுள்ளார். அந்த சந்திப்பில் நடிகர் சிவகுமாரும் உடனிருந்துள்ளார். “கனவு நனவானது… 50 வருடக் காத்திருப்பு. என்னைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தது மகிழ்ச்சி. எனது கதை, எனது பயணம், 40 முழு நிமிடங்கள் கொடுத்தார். சூப்பர்ஸ்டார் எனது 'பன்ச்லைன்'களைப் பேசியதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. குளிர்ச்சியான சிரிப்பு, தூய்மையான கவனம். அவரை சந்தித்த போது, 'தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்,' என்றார். வாவ்..என்ன ஒரு பயணம், என்ன ஒரு மனிதத் தன்மை, அவர் ஒருவர் மட்டுமே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.