ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தற்போது ஹரி இயக்கியுள்ள ரத்னம் படத்தில் நடித்திருக்கும் விஷால், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய 25 ஆண்டு கனவு இப்பொழுது தான் நனவாக போகிறது என்று தெரிவித்துள்ளார். அதோடு, ‛‛என்னுடைய தந்தையிடத்தில் நான் இயக்குனராக வேண்டும் என்று சொன்னபோது அவர் நடிகர் அர்ஜுனிடம் என்னை உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். பின்னர் அவர் விஷால் இப்போது நடிக்கட்டும். இயக்குனர் எப்போது வேண்டுமானால் ஆகிக்கொள்ளலாம் என்று சொன்னதை அடுத்து செல்லமே படத்தில் ஹீரோ ஆனேன்.
இந்த நிலையில்தான் தற்போது துப்பறிவாளன்- 2 படத்தின் மூலம் இயக்குனராகப் போகிறேன். அந்த வகையில் என்னுடைய 25 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. துப்பறிவாளன்- 2 படப்பிடிப்புக்காக இன்று லண்டன் சென்று லொகேஷன் பார்க்கும் வேலையை முதற்கட்டமாக தொடங்கி, மே மாதம் முதல் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். ஒரு இயக்குனராக எனது கனவை முன்னெடுக்க உதவிய மிஷ்கினுக்கு நன்றி. ஒரு இயக்குனராக உங்கள் முன்பு பேசிக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேரம் நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், ஒரு லட்சியம் ஒரு கனவு என்பதை அனைவரும் கண்டிப்பாக வைத்திருப்போம். அந்த கனவை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வந்தால் நிச்சயம் ஒரு நாள் நனவாகும் என்று தெரிவித்து இருக்கிறார் விஷால்.