மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தற்போது ஹரி இயக்கியுள்ள ரத்னம் படத்தில் நடித்திருக்கும் விஷால், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய 25 ஆண்டு கனவு இப்பொழுது தான் நனவாக போகிறது என்று தெரிவித்துள்ளார். அதோடு, ‛‛என்னுடைய தந்தையிடத்தில் நான் இயக்குனராக வேண்டும் என்று சொன்னபோது அவர் நடிகர் அர்ஜுனிடம் என்னை உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். பின்னர் அவர் விஷால் இப்போது நடிக்கட்டும். இயக்குனர் எப்போது வேண்டுமானால் ஆகிக்கொள்ளலாம் என்று சொன்னதை அடுத்து செல்லமே படத்தில் ஹீரோ ஆனேன்.
இந்த நிலையில்தான் தற்போது துப்பறிவாளன்- 2 படத்தின் மூலம் இயக்குனராகப் போகிறேன். அந்த வகையில் என்னுடைய 25 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. துப்பறிவாளன்- 2 படப்பிடிப்புக்காக இன்று லண்டன் சென்று லொகேஷன் பார்க்கும் வேலையை முதற்கட்டமாக தொடங்கி, மே மாதம் முதல் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். ஒரு இயக்குனராக எனது கனவை முன்னெடுக்க உதவிய மிஷ்கினுக்கு நன்றி. ஒரு இயக்குனராக உங்கள் முன்பு பேசிக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேரம் நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், ஒரு லட்சியம் ஒரு கனவு என்பதை அனைவரும் கண்டிப்பாக வைத்திருப்போம். அந்த கனவை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வந்தால் நிச்சயம் ஒரு நாள் நனவாகும் என்று தெரிவித்து இருக்கிறார் விஷால்.