ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
பிரித்விராஜ் நடிப்பில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் என மிக நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த ஆடுஜீவிதம் திரைப்படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பிளஸ்சி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. இதில் அரபு நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் நபராக நடித்துள்ளார் பிரித்விராஜ்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்திலேயே லைவ் ரெக்கார்டிங் முறை பயன்படுத்தப்பட்டு வசனங்கள் லைவ் ஆக பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் தனது கதாபாத்திரத்திற்கு பிரித்விராஜே டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஒரு முறை உயிரோடு வாழ்ந்த இடத்திற்கு நான்கு முறை மறு விசிட் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.