அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கடந்த சில வாரங்களாகவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மலையாள படங்களின் ஆதிக்கம் தான் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் மஞ்சும்மேல் பாய்ஸ் படம் தமிழகத்தில் மொழிமாற்றம் செய்யப்படாமல் அப்படியே வெளியாகி கேரளாவை விட அதிக அளவில் வசூலித்து வருகிறது. இன்னொரு பக்கம் அதற்கு முன்பாக மலையாளத்தில் வெளியாகி நூறு கோடி வசூலை தாண்டிய பிரேமலு திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மலையாளத்தில் பெற்ற அதே வரவேற்பை இங்கேயும் பெற்றுள்ளது.
இயக்குனர் ராஜமவுலியின் மகன் இயக்குனர் எஸ்.எஸ் கார்த்திகேயா இந்த படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்துள்ளார். தெலுங்கிலும் இந்த படத்திற்கு வெற்றி கிடைத்ததை தொடர்ந்து இதன் சக்சஸ் மீட்டை சமீபத்தில் நடத்தியுள்ளார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ராஜமவுலியும் அனில் ரவிபுடியும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குனர் ராஜமவுலி பேசும்போது, “பொதுவாக எனக்கு காதல் படங்கள் பிடிப்பதில்லை. நமக்கு எப்போதுமே ஆக்ஷன் தான். இருந்தாலும் இந்த படம் எப்படி இருக்கிறது என பார்ப்போம் என்று தான் பார்க்க ஆரம்பித்தேன். படம் துவங்கிய 15வது நிமிடத்திலிருந்து சிரிக்க ஆரம்பித்தவன் படம் முடியும் வரை சிரித்துக் கொண்டே இருந்தேன். இந்த படம் தியேட்டரில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்க வேண்டிய படம். கொஞ்சம் பொறாமையுடனும், வலியுடனும் சொல்கிறேன் மலையாள நடிகர்கள் மிகச் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்த படத்தில் நடித்துள்ள மமிதா பைஜூ வரும் நாட்களில் இளைஞர்களின் 'க்ரஷ்' ஆக மாறப் போகிறார். அவரது கதாபாத்திரம் நிச்சயமாக 1989இல் கீதாஞ்சலி படத்தில் நடித்த கிரிஜா மற்றும் பிரேமம் நடிகை சாய் பல்லவி ஆகியோரை போல நினைவு கூறப்படும் என்று பாராட்டியுள்ளார். இந்த படம் வரும் வெள்ளியன்று தமிழகத்திலும் வெளியாக இருக்கிறது.