ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அயலான் படத்திற்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‛அமரன்' படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல் தயாரிக்கும் இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. முருகதாஸ் அடுத்து சல்மான்கான் படத்தை இயக்க போகிறார். அதனால் இந்த படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டு அதற்கு ஏற்றபடி படப்பிடிப்பையும் தீவிரமாக நடத்தி வருகிறார். எப்படியும் இப்படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.