'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

முன்னணி நடிகை பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினரான மீரா சோப்ரா, தமிழில் கடந்த 2005-ல் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' படம் மூலம் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு மருதமலை, ஜாம்பவான், லீ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறையவே டில்லி திரும்பிய அவர் தந்தையின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்தார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான 'சாபட்' படத்தில் நடித்தார். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். 40 வயதாகும் மீரா சோப்ரா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த ரஷித் என்ற மும்பை தொழில் அதிபரை மணக்கிறார். சமீபத்தில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் 12ம் தேதி ஜெய்ப்பூர் சாலையில் அமைந்துள்ள ரிசார்ட்டில் ஒன்றில் திருமணம் நடக்க உள்ளது . நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். திருமண தகவலை மீரா சோப்ரா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. என்றாலும் அவரது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.




