4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் |

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடித்து வரும் படம் 'வேட்டையன்'. 'ஜெய் பீம்' படத்தை இயக்கி த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளில் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இதில் கலந்து கொள்ள நேற்று விமானத்தில் ஐதராபாத் சென்றார் ரஜினி. அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். ரஜினியுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். ரஜினியும் அவர்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். சமீபகாலமாக ரஜினியிடம் பல மாற்றங்கள் தெரிகிறது சசிகலா வீட்டுக்கு செல்கிறார், கருணாநிதி நினைவகம் திறப்பு விழாவிற்கு செல்கிறார், விஜயகுமார் பேத்தி திருமணத்திற்கு செல்கிறார். இந்த மாற்றங்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.