மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
‛சுந்தரி' தொடர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்ததை தொடர்ந்து, அந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கேப்ரில்லா செல்லஸ், ஜிஸ்னு மேனன், கிருஷ்ணன் ரகுநந்தன் ஆகியோருடன் முதல் சீசனில் நடித்த பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் மூத்த நடிகையான வடிவுக்கரசி வில்லி கதாபாத்திரத்தில் என்ட்ரியானதை தொடர்ந்து கதை விறுவிறுப்படைந்துள்ளது. இதில் மேலும் சுவாரசியத்தை சேர்க்கும் வகையில் திரைப்பட நடிகை கவுசல்யாவை மீண்டும் நடிக்க வைத்து வருகின்றனர். கவுசல்யா ஏற்கனவே சீசன் 1-ல் நந்தன் பாரதி என்கிற கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது இந்த நந்தன் பாரதி கதாபாத்திரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.