நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சுந்தரி தொடரின் மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார் நடிகை கேப்ரில்லா செல்லஸ். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தனது வீட்டின் எதிர்ப்பையும் மீறி பல்வேறு தடைகளை தாண்டி இன்று இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் தன் காதலர் ஆகாஷை கணவராக கைபிடித்த அவருக்கு தற்போது குழந்தை பிறக்கவுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சுந்தரி தொடரின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கேப்ரில்லாவே தெரிவித்திருந்தார். தற்போது அவர் குழந்தைப்பேறுக்காக தனது சொந்த ஊருக்கு செல்கிறார். இதனையடுத்து ஊருக்கு கிளம்பும் முன் ரயில்வே ஸ்டேஷனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள கேப்ரில்லா மீடியா பயணத்திற்கு ப்ரேக் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.