300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்வேதா. இந்த சீரியலில் பள்ளி செல்லும் நாயகி தமிழ்ச்செல்விக்கு காதல் விவகாரத்தால் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர். அதுபோலவே தனது நிஜ வாழ்விலும் பள்ளி படிக்கும் போது பல லவ் டார்ச்சர்களை சந்தித்ததாக ஸ்வேதா கூறியுள்ளார்.
'பள்ளியில் படிக்கும் போது ஒரு பையன் எனக்கு பேனா கொடுத்ததை பார்த்து பொறாமை பட்ட இன்னொரு பையன், நம்ம கல்யாணத்துக்கு நான் சீட்டு போட்டு வச்சுருக்கேன், நீ அவன்கிட்ட பேசுறியேன்னு கேட்டான். இன்னொருவன் பிரின்ஸிபால் ரூம் பக்கத்தில் என்னுடைய பெயரையும் அவனின் பெயரையும் எழுதி வைத்திருந்தான். அதேபோல இன்னொருவன் கையை அறுத்துக்கொண்டு வாட்சப்பில் போட்டோ அனுப்பினான்' என்று தனக்கு வந்த லவ் புரொபோஸல்கள் குறித்து அந்த பேட்டியில் கலகலப்பாக கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தங்களது புரொபோஸல்களையும் தெரிவித்து வருகின்றனர்.