மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. தேனி, பண்ணைபுரத்தை அடுத்துள்ள லோயேர் கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை இல்லத்தில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் இளையராஜா சென்னை திரும்பினார். ஆனாலும், வேறு எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் அவரது இசைப் பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளார் இளையராஜா.
பிரபல கர்நாடக இசைப் பாடகரான சஞ்சய் சுப்பிரமணியம் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து 'அது நடந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக இசையில் பிரபல பாடகராக இருக்கும் சஞ்சய், சினிமாவில் இளையராஜா இசையில் பாடியிருப்பதைத்தான் பகிர்ந்துள்ளார் எனத் தெரிகிறது. அது சினிமா பாடலா அல்லது பக்திப் பாடலா என்பது குறித்து தகவல் இல்லை. இருப்பினும் இளையராஜா இசையில் சஞ்சய் சுப்பிரமணியம் பாடுவது குறித்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.