இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. தேனி, பண்ணைபுரத்தை அடுத்துள்ள லோயேர் கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை இல்லத்தில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் இளையராஜா சென்னை திரும்பினார். ஆனாலும், வேறு எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் அவரது இசைப் பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளார் இளையராஜா.
பிரபல கர்நாடக இசைப் பாடகரான சஞ்சய் சுப்பிரமணியம் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து 'அது நடந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக இசையில் பிரபல பாடகராக இருக்கும் சஞ்சய், சினிமாவில் இளையராஜா இசையில் பாடியிருப்பதைத்தான் பகிர்ந்துள்ளார் எனத் தெரிகிறது. அது சினிமா பாடலா அல்லது பக்திப் பாடலா என்பது குறித்து தகவல் இல்லை. இருப்பினும் இளையராஜா இசையில் சஞ்சய் சுப்பிரமணியம் பாடுவது குறித்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.