மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவிலும் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகள் அதிதி, சினிமா நடிகையாக வலம் வருகிறார்.
மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு 2022ல் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் உடன் திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் பிரமாண்டமாய் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இவர்கள் ஆறு மாதங்கள் கூட சேர்ந்து வாழவில்லை.
ரோஹித்தின் கிரிக்கெட் கிளப்பில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இதில் ரோஹித்தும் குற்றச்சாட்டிற்கு ஆளாக அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த பிரச்னையில் ரோஹித், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிகிறது. இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு தற்போது மறுமணம் முடிவாகி, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயமாகி உள்ளது. இவர்களின் போட்டோவை அதிதி தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார். விரைவில் திருமணம் நடக்க உள்ளது.