மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெலுங்கு சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் கே.கே செந்தில்குமார். மகதீரா, ஈகா(நான்ஈ), பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பல வெற்றி படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜமவுலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவர் என்று சொல்லலாம். செந்தில்குமாரின் மனைவி ரூஹி. ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் துறையில் ஆர்வம் கொண்டவர், யோகா பயிற்சியாளரும் கூட. பல தெலுங்கு பிரபலங்களுக்கு இவர் யோகா கற்று கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ரூஹி, செகந்திராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். ரூஹி மறைவுக்கு பல்வேறு தெலுங்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரூஹியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றன.