வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பூ. அதன் பிறகு 1988ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக உருவெடுத்தார் . கடைசியாக 1989ம் ஆண்டு ஹிந்தியில் பிரேம பதான் என்ற படத்தில் நடித்த குஷ்பூ தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஜர்னி என்று ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஹிந்தி நடிகர் நானா படேகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தான் இணைந்திருப்பதை தனது எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ள குஷ்பூ, 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிப்பது புத்துணர்ச்சியை அளித்திருப்பதாகவும், நானா படேகருடன் நடிப்பது உற்சாகமளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.