“ஹிந்தி திரிஷ்யம் 3 தயாரிப்பு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்தனர்” : ஜீத்து ஜோசப் | “உங்களுக்கு செம தைரியம் தான்” : மோகன்லாலுக்கு குஷ்பூ பாராட்டு | ரீமேக் படங்கள்தான் கட்சியை நடத்த உதவியது: பவன் கல்யாண் | பஹத் பாசிலை விட சிறந்த சீனியர் நடிகர்கள் இருக்கிறார்கள் : வைரலாகும் மோகன்லால் பதில் | ஹன்சிகாவுடன் பிரிவா ? அவரது கணவர் பதில்… | ரயிலில் விழப்போன மஞ்சு வாரியர் : காப்பாற்றிய மனோஜ் கே.ஜெயன் | பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா |
'ஆட்டோ சங்கர்' வெப் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்வயம் சித்தா தாஸ். தற்போது அவர் நடித்து வரும் படம் 'அக்காலி'. பிபிஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.உகேஷ்வரன் தயாரிக்கிறார். புதுமுகம் ஜெயக்குமார் நாயகனாக நடிக்கிறார். வினோத் கிஷன், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி, தாரணி ரெட்டி, அர்ஜெய் உள்பட பலர் நடிக்கிறார்கள். கிரி மர்பி ஒளிப்பதிவு செய்ய, அனிஷ் மோகன் இசை அமைத்துள்ளார்.
முகமது ஆசிப் ஹமீத் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது “அக்காலி என்பதற்கு இறப்பில்லாத மனிதன் என்று பொருள். அப்படி ஒரு சிலர் இருப்பதாக நம்பப்படுகிறது. அதையே கதையின் மூலக் கருவாக வைத்து இந்த படம் உருவாகிறது. இது ஒரு திரில்லர் படம்.. சென்னையிலுள்ள பொழிச்சலூர் காட்டுப்பகுதியில் பாழடைந்த பங்களா செட் அமைத்து படமாக்கினோம். இந்த அரங்கை தோட்டா தரணி மிகவும் வித்தியாசமாக அமைத்து தந்தார். அங்கு 2 வாரங்கள் கிளைமாக்ஸ் படமானது. ஸ்வயம் சித்தா தாஸ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் கையாளும் ஒரு வழக்குதான் படத்தின் கதையாகும். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது” என்றார்.