புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயடு லோஹர். 'முகில்பேட்' என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 'தெல்லூரி' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தற்போது 'நிலா வரும் வேளை' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக நடிக்கிறார். மிராக்கிள் மூவீஸ் சார்பில் ஸ்ருதி செல்லப்பா தயாரிக்கிறார்.
இதனை 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை இயக்கிய ஏ.ஹரிகரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது த்ரில்லர் வகை கதை. படத்தில் காடு ஒரு முக்கிய லொகேஷனாக இருக்கும். அதுதவிர பல லொகேஷன்களில் படமாக்குகிறோம். இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கவில்லை. தமிழில் எடுத்துவிட்டு, பிறகு தெலுங்கிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். இரு மொழி ரசிகர்களுக்கும் இந்த கதை, கனெக்ட் செய்யும் வகையில் இருக்கும். மலையாளத்தில் 19ம் நூற்றாண்டு படத்தில் நடித்தவர் கயடு லோஹர். இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவர்தான் ஹீரோயின். 1970களில் நடக்கும் கதையாக இது உருவாகிறது. என்றார்.