பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
செய்திவாசிப்பாளரான பாத்திமா பாபு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முகமாக வலம் வருகிறார். சின்னத்திரைக்கு முன்பாக ஏராளமான படங்களில் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாத்திமா பாபு யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுத்து அசத்தினார். அதன்பின் சீரியலில் அவரை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பாத்திமா பாபு, 'இன்று - புதிய தெலுங்கு சீரியலில் முதல் நாள்' என்று தனது புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் பாத்திமா பாபுவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.