இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கேப்டன் மில்லர், மற்றும் மிஷன் சேப்டர் 1 படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற கருத்துகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்டன்ட் சில்வா. தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, பெங்காலி மற்றும் சிங்களம் என பல மொழிகளிலும் 300 படங்களுக்கு மேலாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அஜித் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அதன் பிறகு 'என்னை அறிந்தால்' படத்திற்கு சண்டை அமைத்தார். சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். 2022ம் ஆண்டு 'சித்திரை செவ்வானம்' என்ற படத்தை இயக்கினார். சமுத்திரக்கனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா நடித்திருந்தார்கள். சண்டை இயக்குனர் இயக்கிய படம் என்றாலும் சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன படம்.
இந்த நிலையில் தான் அடுத்து இயக்கப்போகும் படம் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார். இது ஹாலிவுட் பாணியிலான அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்கிறார் சில்வா. விஜய், அஜித் இருவரிடமும் கதையை சொல்லிவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறார். ஒரு வேளை இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அந்த கதையை அருண் விஜய்யை வைத்து இயக்குவார் என்று தெரிகிறது.