மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இது என்ன மாயம், சில சமயங்களில் உள்ளிட்ட படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய பவானிஸ்ரீ, க.பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு 'பாவ கதைகள்' என்ற அந்தாலஜி படத்தில் நடித்தார். 'விடுதலை' படத்தில் தமிழரசி கேரக்டர் மூலம் புகழ்பெற்றார். தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுதவிர 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தில் நடிக்கிறார்.
விடுதலை படத்தில் நடித்து நன்றாக பெயர் எடுத்து விட்டதால் வாய்ப்புகள் அடுத்தடுத்து வரும் என்று நினைத்தார். ஆனால் அவரை தேடி வந்த வாய்ப்புகள் அவருக்கு திருப்தி தரும் கதைகளாக அமையவில்லை. இதனால் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார். அதேசமயம் தனியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை ஆனந்த் இயக்குகிறார். ஆனந்த் ராம், மிர்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.