துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரம் அடுத்த லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள அவர்களது தோட்டத்தில் நடைபெற உள்ளது.
இளையராஜாவின் அண்ணன், தம்பி குடும்பத்தில் பவதாரிணி மற்றும் மறைந்த அண்ணன் ஆர்டி பாஸ்கர் மகள் வாசுகி பாஸ்கர் ஆகிய இருவர் மட்டுமே பெண் வாரிசுகள். தனது ஒரே சகோதரியைப் பறி கொடுத்த வாசுகி பாஸ்கர் நேற்று அழுத போது அவரை வெங்கட் பிரபு ஆறுதல் அளித்து அழைத்துக் கொண்ட காட்சியைப் பார்த்த பலருக்கும் பெரும் சோகமாக இருந்தது.
திரையுலகில் பிரபல ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் வாசுகி பாஸ்கர், பவதாரிணி குறித்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், “என்னுடைய மறுபாதி நீ, அதையும் என்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டாய். மற்றொரு பக்கத்தில் உன்னை பார்க்கிறேன். எனது ஒரே ஒரு சகோதரி. உன்னை நாங்கள் அனைவரும் மிகவும் மிஸ் செய்வோம். லவ் யு பவதா,” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.