மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரம் அடுத்த லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள அவர்களது தோட்டத்தில் நடைபெற உள்ளது.
இளையராஜாவின் அண்ணன், தம்பி குடும்பத்தில் பவதாரிணி மற்றும் மறைந்த அண்ணன் ஆர்டி பாஸ்கர் மகள் வாசுகி பாஸ்கர் ஆகிய இருவர் மட்டுமே பெண் வாரிசுகள். தனது ஒரே சகோதரியைப் பறி கொடுத்த வாசுகி பாஸ்கர் நேற்று அழுத போது அவரை வெங்கட் பிரபு ஆறுதல் அளித்து அழைத்துக் கொண்ட காட்சியைப் பார்த்த பலருக்கும் பெரும் சோகமாக இருந்தது.
திரையுலகில் பிரபல ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் வாசுகி பாஸ்கர், பவதாரிணி குறித்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், “என்னுடைய மறுபாதி நீ, அதையும் என்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டாய். மற்றொரு பக்கத்தில் உன்னை பார்க்கிறேன். எனது ஒரே ஒரு சகோதரி. உன்னை நாங்கள் அனைவரும் மிகவும் மிஸ் செய்வோம். லவ் யு பவதா,” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.