ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
'தாமிரபரணி, பூஜை' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஹரி, நடிகர் விஷால் மீண்டும் இணைந்துள்ள படம் 'ரத்னம்'. இந்தப் படமும் ஒரு ஆக்ஷன் படமாகத்தான் படமாகி வருகிறது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டார் விஷால். அது குறித்து, “யெஸ், யெஸ், யெஸ்… 'ரத்னம்' படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டேன். ஹரி சாருடன் மூன்றாவது முறையாகவும் மற்றும் டார்லிங் ஒளிப்பதிவாளர் சுகுமார், மொத்த குழுவுடன் இணைந்து பணியாற்றியது உண்மையாகவே மகிழ்ச்சி. தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை என ஆரம்பம் முதல் ஒரு நேர்மறையான சூழலில் பணி புரிந்தது வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் குழுவினருக்கு நன்றி. விரைவில் டார்லிங் தேவிஸ்ரீ பிரசாத்தின் சூப்பரான சிங்கிள் டிராக்கை வெளியிட உள்ளோம். ஆக்ஷன் படப் பிரியர்களுக்கு இப்படம் கொண்டாட்டமாக இருக்கும்.
இந்த குடும்பப் பாங்கான படம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் திரையில் பார்ப்பதற்கு இருக்கும். இது கோடை விடுமுறை டிரீட். விரைவில் பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும். நன்றி, கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என விஷால் குறிப்பிட்டுள்ளார்.