3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பான் இந்தியா படம் 'சலார்'. இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிரபாஸ் மிகக் குறைவான வசனங்களே பேசியிருக்கிறார் என ஒரு ரசிகர் படம் வெளிவந்த போதே குறிப்பிட்டிருந்தார். “சலார்' படத்தில் பிரபாஸ் 100 முதல் 110 வரிகள் அதாவது ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் வசனமே பேசியிருக்கிறார். தோராயமாக 3 முதல் 5 நிமிடங்கள் வரை மட்டுமே அந்த வசனங்கள் இருக்கும்,”.
ஓடிடியில் வந்த பிறகு அதே ரசிகர் பிரபாஸ் பேசிய வசனங்களை எடிட் செய்து ஒரு வீடியோவாகவே வெளியிட்டுள்ளார். “சலார்' படத்தில் பிரபாஸ் பேசிய வசனங்கள் தோராயமாக 4 நிமிடங்கள் மட்டுமே சில இடைவெளிகளுடன் வருகிறது. இடைவெளியில்லாமல் 2 நிமிடம் 35 வினாடிகள் இருக்கிறது,” என கணக்கிட்டு சொல்லியிருக்கிறார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டாம் பாகத்திலாவது இரண்டு பக்கங்களுக்கு மேல் வசனம் பேசுவாரா பிரபாஸ் ?.