அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? |
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 'சென்னையில் அயோத்தி' எனும் நிகழ்ச்சி நாரத கான சபாவில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது : சரித்திரத்தில் இது முதல் நிகழ்வு. தமிழ்நாட்டில் அல்ல, வட இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க முதன்முறையாக ஒரே ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அது இந்த நாள்தான். அது சரித்திரத்தில் என்றும் அழியா புகழை நமது இந்த காரியத்தை நல்லபடியாக முடித்தவர் பிரதமர் நரேந்திர மோடி. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இது யாரால் முடியும்? எல்லோரும் செய்ய முடியுமா? முடியவே முடியாது. அவருக்கு பகவான் எழுதியுள்ளார். இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள்? யார் யார் என்ன செய்தார்கள்? எது சரித்திரத்தில் நிற்கிறது என்று கணக்கு பார்க்க வேண்டும். யார் செய்தது அதிகமாக இருக்கிறது என்றும் கணக்கு பாருங்கள்.
பிரதமர் மோடி செய்த இந்த காரியம் இருக்கிறதே, என்னால் சொல்ல முடியவில்லை. சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது. இந்த நாளில் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது எனக்கு பெரும் மன நிறைவை தருகிறது. அதேநேரத்தில் இந்தவேளை அயோத்தியில் இருக்க வேண்டிய நான், இங்கே நின்றுகொண்டிருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.