பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கின்றார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணியில் வேங்கை, குட்டி ஆகிய படங்கள் வெளியாகி பாடல்கள் வெற்றி பெற்றன. தற்போது நீண்ட வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.