'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
தெலுங்கில் சில வருடங்களுக்கு முன்பு வரை அதிரடி இசையமைப்பாளராக வலம் வந்தவர் இசையமைப்பாளர் மணிசர்மா. தமிழில் விஜய், அர்ஜுன் ஆகியோரின் படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்த மணிசர்மா சமீபகாலமாக இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. குறிப்பாக கடந்த 2022ல் பத்து படங்களுக்கு இசையமைத்த மணிசர்மா கடந்த வருடம் ஒரே ஒரு படத்திற்கு மட்டும் அதுவும் அவ்வளவு பிரபலமில்லாத ஒரு ஹீரோவின் படத்திற்கு மட்டுமே இசையமைத்துள்ளார் என்பது ஆச்சரியம் கலந்த சோகம்.
இந்த வருடத்தில் பூரி ஜெகன்நாத்தின் ‛ஐ ஸ்மார்ட் ஷங்கர்' மற்றும் விஷ்ணு மஞ்சுவின் ‛கண்ணப்பா' என இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார் மணிசர்மா. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛பெரும்பாலும் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தமன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தை தேடியே செல்கின்றனர் அவர்களுக்கு இரண்டு படங்கள் கொடுத்தால் எனக்கு ஒரு பட வாய்ப்பாவது கொடுக்கலாம் அல்லவா'' என்று மனம் விட்டு கேட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் இசையமைப்பாளர்கள் சிலர் காப்பி சர்ச்சையில் சிக்குவது குறித்தும் அப்படி அவர் ஏதாவது பாடல்களை காப்பி அடித்திருக்கிறாரா என்றும் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மணி சர்மா, “2002ல் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ‛ஆதி' திரைப்படத்தில் ‛சிக்கி சிக்கி' என்கிற பாடலை வேறு மொழி படத்தில் இருந்து அப்படியே காப்பி அடித்து பயன்படுத்துமாறு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். பட வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக வேறு வழி இன்றி என் மனதிற்கு பிடிக்காமலேயே அதை செய்தேன். எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் தன்னுடைய தனித்துவமான இசையை கொடுக்க வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும்” என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.