வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சமீபத்தில் 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' அதாவது சுருக்கமாக 'கோட்' என்கிற பெயர் வரும் விதமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதும் படத்தின் போஸ்டர்கள் மூலமும் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து வருகிறார். கடந்த 22 வருடங்களுக்கு முன்பு வெளியான வசீகரா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த மகிழ்ச்சியை சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் பகிர்ந்து கொண்டார் சினேகா.
அப்போது பேசிய சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா இதற்கு முன்னதாக வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணியாக நடிப்பதற்கு சினேகாவிற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சினேகா மறுத்துவிட்டார். அது நல்ல முடிவு என்று நான் அப்போதே பாராட்டினேன். அப்போது அந்த முடிவை எடுத்ததால் தான் இப்போது விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது” என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.