காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச., 28ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் படத்தில் அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகராக மாறிய சரத்குமார் வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்த அப்போது வரவில்லை.
தற்போது சென்னை திரும்பி உள்ள சரத்குமார், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‛‛விஜயகாந்த் முழுமையாக குணமாகி வருவார் என நம்பினேன். அவர் மறைந்த நாளை கருப்பு தினமாகவே கருதுகிறேன். தொடர்ந்து 5 படங்களில் எனக்கு வாய்ப்பு தந்தார். தனக்கு போட்டியாக வந்துவிடுவேன் என கருதாமல் தொடர்ந்து அவர் தயாரிக்கும் படங்களில் என்னை நடிக்க வைத்தார். விஜயகாந்த்தின் சிறந்த பண்புகள், குணாதிசயங்களை நாம் பின்பற்ற வேண்டும்'' என்றார்.