ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச., 28ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் படத்தில் அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகராக மாறிய சரத்குமார் வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்த அப்போது வரவில்லை.
தற்போது சென்னை திரும்பி உள்ள சரத்குமார், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‛‛விஜயகாந்த் முழுமையாக குணமாகி வருவார் என நம்பினேன். அவர் மறைந்த நாளை கருப்பு தினமாகவே கருதுகிறேன். தொடர்ந்து 5 படங்களில் எனக்கு வாய்ப்பு தந்தார். தனக்கு போட்டியாக வந்துவிடுவேன் என கருதாமல் தொடர்ந்து அவர் தயாரிக்கும் படங்களில் என்னை நடிக்க வைத்தார். விஜயகாந்த்தின் சிறந்த பண்புகள், குணாதிசயங்களை நாம் பின்பற்ற வேண்டும்'' என்றார்.