இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த, 26 வயது பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில், நவம்பரில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த, சென்னை கிண்டியை சேர்ந்த ராஜேஷ், 32 என்பவர், என் தோழி வாயிலாக பழக்கமானார். தனக்கு திருமணமானதை மறைத்த ராஜேஷ், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பல்வேறு காரணங்களை கூறி, 10 லட்சம் ரூபாய் வரை என்னிடம் வாங்கினார்.
திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது பற்றி கேட்டபோது என்னை மிரட்டினார். எனக்கு திருமண ஆசை காட்டி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை படம் எடுத்தும் வைத்துள்ளார். ராஜேஷ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரித்து, ராஜேஷ் மீது, பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட இரு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும் நீண்ட நாட்களாக ராஜேஷ் கைது செய்யப்படாததால், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அப்பெண் சமீபத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ராஜேஷ் இன்று கைது செய்யப்பட்டார்.