ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த, 26 வயது பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில், நவம்பரில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த, சென்னை கிண்டியை சேர்ந்த ராஜேஷ், 32 என்பவர், என் தோழி வாயிலாக பழக்கமானார். தனக்கு திருமணமானதை மறைத்த ராஜேஷ், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பல்வேறு காரணங்களை கூறி, 10 லட்சம் ரூபாய் வரை என்னிடம் வாங்கினார்.
திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது பற்றி கேட்டபோது என்னை மிரட்டினார். எனக்கு திருமண ஆசை காட்டி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை படம் எடுத்தும் வைத்துள்ளார். ராஜேஷ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரித்து, ராஜேஷ் மீது, பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட இரு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும் நீண்ட நாட்களாக ராஜேஷ் கைது செய்யப்படாததால், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அப்பெண் சமீபத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ராஜேஷ் இன்று கைது செய்யப்பட்டார்.