மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த, 26 வயது பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில், நவம்பரில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த, சென்னை கிண்டியை சேர்ந்த ராஜேஷ், 32 என்பவர், என் தோழி வாயிலாக பழக்கமானார். தனக்கு திருமணமானதை மறைத்த ராஜேஷ், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பல்வேறு காரணங்களை கூறி, 10 லட்சம் ரூபாய் வரை என்னிடம் வாங்கினார்.
திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது பற்றி கேட்டபோது என்னை மிரட்டினார். எனக்கு திருமண ஆசை காட்டி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை படம் எடுத்தும் வைத்துள்ளார். ராஜேஷ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரித்து, ராஜேஷ் மீது, பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட இரு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும் நீண்ட நாட்களாக ராஜேஷ் கைது செய்யப்படாததால், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அப்பெண் சமீபத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ராஜேஷ் இன்று கைது செய்யப்பட்டார்.