மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் நேற்றுமுன்தினம் மறைந்தார். அரசு மரியாதை உடன் அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதுபற்றி விஜயகாந்த்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் வெளியிட்ட பதிவில், ‛‛உங்களின் இதயப்பூர்வமான இரங்கலுக்கு நன்றி. மக்களின் இந்த ஆதரவு, எங்களின் தந்தை எப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார், எவ்வளவு அன்பை சம்பாதித்திருக்கிறார் என்பதை காட்டுகின்றன. இந்த இழப்பிலிருந்து நாங்கள் மீண்டும் வர இந்த கடுமையான நேரத்தில் உங்களின் இந்த ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை அளிக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.