துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தை முடிந்ததும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணியில் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், சில மாதங்களுக்கு சோசியல் மீடியாவில் இருந்து தான் வெளியேறப் போவதாக லோகேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ உள்ளிட்ட சில படங்களில் அவருடன் திரைக்கதை வசனம் எழுதுவதில் உதவியாளராக பணியாற்றி வந்த இயக்குனர் ரத்னகுமார், ரஜினி 171-வது படத்தில் இடம் பெறவில்லை. ரத்னகுமார் தனது அடுத்த படத்திற்கான இயக்கத்தில் உள்ளதால் ரஜினி 171ல் பணியாற்றவில்லை என லோகேஷ் கூறினார்.
இதனிடையே விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார், காக்கா - கழுகு கதை குறித்து பேசினார். அதையடுத்து ரஜினியை கருத்தில் கொண்டு தான் அவர் இப்படி பேசியதாக ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இதன் காரணமாக, அப்போது சோசியல் மீடியாவில் இருந்தே வெளியேறினார் ரத்னகுமார்.
இப்படியான நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிப்பதால் அந்த படத்தில் இயக்குனர் ரத்னகுமார் பணியாற்றினால் அது சரிவராது என்பதால் அவர் பணியாற்றவில்லை என்கிறார்கள்.