ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, தமிழில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் ஒரு சில படங்கள் ஹிட் அடிக்க பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் கடந்த வருடம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் ஐந்து படங்களுக்கு மேல் நடித்த அவருக்கு இந்த வருடம் இதுவரையிலும் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தை தொடர்ந்து வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஹிந்தியில் மட்டும் தேவி என்கிற படத்தில் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவுக்கு பூஜா ஹெக்டே சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அங்கே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவருக்கு அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி துபாயில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார் ஆனால் பூஜா ஹெக்டேவின் சோசியல் மீடியா குழுவினர் இந்த தகவலில் உண்மை எதுவும் இல்லை.. யாரோ ஏதோ காரணத்திற்காக இப்படி தவறான தகவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்த செய்தியை மறுத்துள்ளனர்.