இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ் சினிமாவில் சில சமயங்களில் சில ஆச்சரியங்கள் நடக்கும். அப்படி ஒரு ஆச்சரியம் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' படத்திற்கு நடந்துள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இப்படம் கடந்த ஐந்து வருடங்களாக உருவாகி வருகிறது. இவ்வளவு நீண்ட காலம் தயாராகும் படங்களுக்கு குறிப்பிடும் அளவு வியாபாரம் நடக்காது. அப்படி ஒரு சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால், அந்த சென்டிமென்ட்டை 'அயலான்' முறியடித்திருக்கிறது.
இப்படத்தின் தமிழக வினியோக உரிமை படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முனனதாகவே முடிந்துவிட்டது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏஆர் ரஹ்மான் இசை, புதிய கதைக்களம், விஎப்எக்ஸ் காட்சிகள் என இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதே இதற்குக் காரணம் என்கிறார்கள். இத்தனை வருட போராட்டத்திற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் உள்ளதாம்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள மற்ற படங்களுக்கு முன்பாகவே இப்படத்தின் வியாபாரம் முழுமையாக முடிந்துள்ளது. சிவகார்த்திகேயன் மீது தனிப்பட்ட சர்ச்சையை சிலர் கிளப்பியுள்ள நிலையில் அது அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.