வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று அந்த ரசிகர்களைக் கவர்ந்து கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் வகிதா ரகுமான், ஹேமமாலினி, ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள். ஸ்ரீதேவிக்குப் பிறகு தீபிகா படுகோனே பிரபலமானாலும் அவரால் கனவுக்கன்னி என்ற அளவிற்கெல்லாம் போக முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் இரண்டு தென்னிந்திய நடிகைகள் பாலிவுட் ரசிகர்களை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். 'ஜவான்' படத்தில் அறிமுகமான நயன்தாரா, 'அனிமல்' படத்தில் நடித்த ராஷ்மிகா தான் அந்த இருவர். நயன்தாரா தமிழில் நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் ஹிந்தியில் இந்த வருடம்தான் அறிமுகமானார். ராஷ்மிகா மந்தனா இதற்கு முன்பு 'குட்பை, மிஷன் மஞ்சு' ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் அவருக்குக் குறிப்பிடும்படியாக அமையவில்லை. ஆனால், 'அனிமல்' படம் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்துவிட்டது.
நயன்தாரா, ராஷ்மிகா இருவரும் அடுத்து வேறு எந்த ஹிந்திப் படங்களிலும் நடிப்பதற்கு இதுவரை சம்மதிக்கவில்லை. நயன்தாரா தமிழ்ப் படங்களிலும், ராஷ்மிகா தெலுங்குப் படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள்.




