மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. மாறுபட்ட கதைகள், கதாபாத்திரங்கள் என அவருடைய படங்களுக்கு தென்னிந்திய ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம். அவர் நடித்துள்ள 'ஹை நான்னா' படம் வரும் டிசம்பர் 7ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று நானி கலந்து கொண்டு பேசினார். அப்போது விரைவில் ஒரு தமிழ் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளேன். அது பற்றிய அறிவிப்பை இப்போது வெளியிட முடியாது. சீக்கிரமே வெளியிடுவோம் என்றார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'நான் ஈ' படத்திற்குப் பிறகு நானி, நேரடியாக எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. தான் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்தால் அதை தெலுங்கு ரசிகர்கள் தமிழ்ப் படம் போல நினைக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் தெலுங்குப் படம் போல பார்க்கிறார்கள். 'பாகுபலி, காந்தாரா' போன்ற படங்கள் வந்த பிறகு நடிகர்கள் யார் என்பதைப் பார்ப்பதில்லை. கதை என்னவென்றுதான் பார்க்கிறார்கள். அதனால்தான் நல்ல கதை உள்ள படங்களில் நடித்து வருகிறேன். நான் தெலுங்குப் படங்களில் நடித்தாலும், அவை கண்டிப்பாகத் தமிழிலும் வெளியாகும்,” என்றார்.