25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. மாறுபட்ட கதைகள், கதாபாத்திரங்கள் என அவருடைய படங்களுக்கு தென்னிந்திய ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம். அவர் நடித்துள்ள 'ஹை நான்னா' படம் வரும் டிசம்பர் 7ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று நானி கலந்து கொண்டு பேசினார். அப்போது விரைவில் ஒரு தமிழ் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளேன். அது பற்றிய அறிவிப்பை இப்போது வெளியிட முடியாது. சீக்கிரமே வெளியிடுவோம் என்றார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'நான் ஈ' படத்திற்குப் பிறகு நானி, நேரடியாக எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. தான் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்தால் அதை தெலுங்கு ரசிகர்கள் தமிழ்ப் படம் போல நினைக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் தெலுங்குப் படம் போல பார்க்கிறார்கள். 'பாகுபலி, காந்தாரா' போன்ற படங்கள் வந்த பிறகு நடிகர்கள் யார் என்பதைப் பார்ப்பதில்லை. கதை என்னவென்றுதான் பார்க்கிறார்கள். அதனால்தான் நல்ல கதை உள்ள படங்களில் நடித்து வருகிறேன். நான் தெலுங்குப் படங்களில் நடித்தாலும், அவை கண்டிப்பாகத் தமிழிலும் வெளியாகும்,” என்றார்.