ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு |
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் விஸ்காம் துறையின் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனை பல்கலைகழத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். விழாவில் எஸ்.ஏ.சியின் மனைவி ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னையில் அரசு பணியில் வேலைக்கு சேர்ந்தார். எம்.ஜி.ஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் மூலம் சவுண்ட் என்ஜினீயரான இவர் பின்னர் டி.என்.பாலுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 1981ம் ஆண்டு 'சட்டம் ஒரு இருட்டரை' படத்தின் மூலம் இயக்குனரானார். அதன்பிறகு 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். பாலிவுட் படங்களும் இயக்கி உள்ளார். பல படங்களில குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். டூரிங் டாக்கீஸ், டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தனது மகன் விஜய்யை தனது தயாரிப்பு படங்களில் நடிக்க வைத்து ஹீரோவாக்கினார். இப்போது அவர் முன்னணி நடிகராக இருக்கிறார்.