கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி |
நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழ் சினிமாவில் உள்ள பல சங்கங்கள், சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். பிறமொழிகளில் உள்ள கலைஞர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தப் பிரச்னை குறித்து, தேசிய மகளிர் ஆணையம், தானாக முன்வந்து விசாரணையை துவக்கியது. பெண்ணை அவமதிக்கும் வகையில், அநாகரிகமாக பேசியது தொடர்பாக, மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.